இலங்கையில் அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்
By: Nagaraj Tue, 14 Mar 2023 09:35:01 AM
கொழும்பு: இலங்கையில் அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் அஞ்சல் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :
people |