Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் 2021ம் ஆண்டு வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிப்பு என்று அறிவிப்பு

கேரளாவில் 2021ம் ஆண்டு வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிப்பு என்று அறிவிப்பு

By: Nagaraj Sun, 05 July 2020 8:53:13 PM

கேரளாவில் 2021ம் ஆண்டு வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிப்பு என்று அறிவிப்பு

கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகள் 2021ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

one year,curfew,extension,declaration,stir ,ஓராண்டு, ஊரடங்கு விதிமுறை, நீட்டிப்பு, அறிவிப்பு, பரபரப்பு

மேலும் நாடு முழுவதும் மத்திய அரசின் அறிவிப்பின்படி ஜூலை 31 வரை மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகள் இன்னும் ஒரு ஆண்டுக்கு நீடிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆம், 2021 ஆம் ஆண்டு ஜூலை வரை ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்று கேரள அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளா மாநிலம் ஊரடங்கு விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|