இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
By: Nagaraj Sun, 23 Oct 2022 2:41:29 PM
புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,000க்கும் கீழ் குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,994 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து
42 ஆயிரத்து 742 ஆக அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் ஒரே நாளில் 4 பேர்
உயிரிழந்துள்ளனர். இதுவரை பலி எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 961 ஆக
உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களிலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.