சிவகங்கை மாவட்டத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
By: Monisha Thu, 27 Aug 2020 10:13:48 AM
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
தமிழகத்தில் புதிதாக நேற்று 5 ஆயிரத்து 958 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 97 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 52 ஆயிரத்து 362 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 839 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 129 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 25 பேர் நேற்று வீடு திரும்பினர்.