பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு .. பள்ளிக்கல்வித்துறை
By: vaithegi Sun, 21 May 2023 2:47:25 PM
சென்னை: பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை (மே.22) நடைபெறவிருந்த பணி மாறுதல் கலந்தாய்வு ஒரு சில காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கலந்தாய்வு நாளை நடைபெறாது ....
தமிழகத்தில் அரசு பள்ளி. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணி மாறுதல். பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு மாறுதல் கலந்தாய்வு கடந்த 15-ம் தேதி துவங்கியது.
இதனை அடுத்து முதல் நாள் அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த மே 17 மற்றும் 19ம் தேதிகளில் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்றது.
மேலும் மே. 22ம் தேதி பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சில காரணங்களை முன்னிட்டு நாளை நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.