Advertisement

மக்கள் ரத்த தானம் செய்ய டில்லி முதல்வர் வேண்டுகோள்

By: Nagaraj Fri, 16 Sept 2022 10:20:51 PM

மக்கள் ரத்த தானம் செய்ய டில்லி முதல்வர் வேண்டுகோள்

புதுடில்லி: ரத்தானம் செய்யுங்கள்... சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் ரத்த தானம் செய்யுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்த நாள் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி கொண்டப்பட உள்ளது. இந்நிலையில், பகத்சிங் பிறந்த தினத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ரத்த தானம் செய்யுங்கள் என தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறிருப்பதாவது: “நாட்டின் தலைநகர் டில்லியில் 50க்கும் அதிகமான இடங்களில் ரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் வருகிற செப்.28ம் தேதி பகத்சிங் பிறந்த நாளில் ரத்த தானம் செய்ய வேண்டும். பகத்சிங்கின் கொள்கைகள் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள தில்லி மற்றும் பஞ்சாப் அரசினால் பின்பற்றப்பட்டு வருகிறது.

sacrifice,bhagat singh,freedom struggle,soldiers,bloodshed camps ,தியாகம், பகத்சிங், சுதந்திரப் போராட்டம், வீரர்கள், ரத்ததான முகாம்கள்

உங்களது இருப்பிடங்களில் ரத்த தான முகாம்கள் இல்லாவிட்டாலும், நீங்கள் முகாம்கள் ஏற்பாடு செய்ய முயற்சியினை முன்னெடுக்க வேண்டும்.


ரத்த தானம் செய்வது தான் இளம் வயதிலேயே நாட்டுக்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த பகத்சிங் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் அளிக்கும் சிறப்பான மரியாதையாக இருக்கும். ஆம் ஆத்மி மட்டுமின்றி அனைத்துக் கட்சித் தலைவர்களும் ரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்வதை முன்னெடுக்க வேண்டும்.” என்றார்.

Tags :