கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்
By: Monisha Sat, 20 June 2020 1:44:02 PM
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே மிக வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு பொதுமக்கள் தவிர்த்து பதவியில் இருப்பவர்களும் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது டெல்லி மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகரான சத்யேந்திர ஜெயின் என்பவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்கள் தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஏற்கனவே தமிழக எம்எல்ஏ ஒருவர்கொரோனாவால் பலியாகி உள்ள நிலையில் தற்போது அமைச்சர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.