காற்றின் தரம் மேம்படுவதால் தடையை நீக்கியது டெல்லி
By: Nagaraj Mon, 20 Nov 2023 07:07:08 AM
புதுடில்லி: தடை நீக்கம்... டெல்லியில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதால் பிற மாநில வாகனங்கள் நகருக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை 405 ஆக இருந்த காற்றின் தரப்புள்ளி நேற்று 319 ஆகக் குறைந்தது.
இதனைத் தொடர்ந்து பொதுத் திட்டங்கள் தொடர்பான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் வாகனங்கள், வணிக நான்கு சக்கர வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை தேசிய காற்றுத்தர மேலாண்மை ஆணையம் நீக்கியுள்ளது.
இந்த நிலையில், அனைத்து அவசரகால நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுமாறுமாறும் டெல்லி அரசை அந்த ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
Tags :
action |
embargo |