TNPSC தேர்வுகளில் புதிய விதிமுறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கை
By: vaithegi Sat, 11 Feb 2023 11:35:41 AM
சென்னை: வலுக்கும் கோரிக்கை .... தமிழகத்தில் அரசு வேலைக்காக ஏகப்பட்ட இளைஞர்கள் கனவுடன் இருக்கின்றனர். மேலும் அரசு துறை பணிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நடத்தப்படுகின்றன. இதையடுத்து ஆண்டுதோறும் பல பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இதனை அடுத்து அதில் பலர் தேர்ச்சி பெற்று அரசு துறைகளில் வேலை செய்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் TNPSC மூலமாக நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் புதிய விதிமுறை ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதாவது TNPSC வெளிப்படைத் தன்மையுடன், சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு தேர்வு முடிவுக்கு முன்னதாக தேர்வாணையம் இறுதியாக முடிவு செய்யப்பட்ட விடைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC இது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.