Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரபேல் விமானங்களுடன் இந்தியாவில் தயாரான ஆயுதங்களை இணைக்க கோரிக்கை

ரபேல் விமானங்களுடன் இந்தியாவில் தயாரான ஆயுதங்களை இணைக்க கோரிக்கை

By: Nagaraj Sun, 23 July 2023 11:23:42 PM

ரபேல் விமானங்களுடன் இந்தியாவில் தயாரான ஆயுதங்களை இணைக்க கோரிக்கை

புதுடில்லி: இந்திய விமானப்படை வலியுறுத்தல்... ரபேல் விமானங்களுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட SAAW எனப்படும் நவீன வான் வழி தாக்குதலை முறியடிக்கும் ஆயுதம், அஸ்திரா ஏவுகணை போன்றவற்றை இணைக்க டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தை இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.

டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளுடன், தனியார் நிறுவனங்களால் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்களை எதிர்காலத்தில் ரபேலுடன் இணைக்க விமானப்படை திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

indian arms su-30,rafale aircraft,air force,mki,tejas ,இந்திய ஆயுதங்கள் எஸ்.யு.-30, ரபேல் விமானம், விமானப்படை, எம்.கே.ஐ., தேஜாஸ்

பாதுகாப்புத்துறையில் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலும், சர்வதேச சந்தையை இந்திய ஆயுதங்கள் அடையும் நோக்கிலும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்திய ஆயுதங்கள் எஸ்.யு.-30 எம்.கே.ஐ., தேஜாஸ் விமானங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Tags :
|