Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி மும்பையில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு

சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி மும்பையில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு

By: Karunakaran Wed, 09 Sept 2020 2:15:18 PM

சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி மும்பையில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு

சமீபத்தில் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாக பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரணாவத் கூறினார். இதற்கு மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதனால் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது. அதன்பின், சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது.

மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கலாம் என கங்கனா ரணாவத் நேற்று முன்தினம் அச்சம் தெரிவித்திருந்தார். தற்போது, பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நேற்று காலை நோட்டீஸ் வழங்கியது.

demolition,kangana ranaut,house,mumbai ,இடிப்பு, கங்கனா  ரணாவத், வீடு, மும்பை

கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து கங்கனா ரணாவத்தின் வக்கீல் வெளியிட்ட அறிக்கையில், கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கங்கனா ரணாவத்தை அச்சுறுத்த முயற்சி செய்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் மும்பை மாநகராட்சி சார்பில் மீண்டும் கங்கனா வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது, மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனாவின் வக்கீல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Tags :
|