Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அசர்வா ரயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தகர்ப்பு... தீவிரவாத செயல் என கண்டுபிடிப்பு

அசர்வா ரயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தகர்ப்பு... தீவிரவாத செயல் என கண்டுபிடிப்பு

By: Nagaraj Wed, 16 Nov 2022 7:22:48 PM

அசர்வா ரயில் நிலைய பகுதியில் தண்டவாளம் தகர்ப்பு... தீவிரவாத செயல் என கண்டுபிடிப்பு

உதய்பூர்: உதய்பூர் - அகமதாபாத் இடையே பெரும் விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் ரயில் தண்டவாளத்தை தீவிரவாதிகள் தகர்த்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சதியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையேயான ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 31ம் தேதி திறந்து வைத்தார். இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள அசர்வா ரயில் நிலையம் அருகே கடந்த 12ம் தேதி இரவு வெடிகுண்டு சத்தம் கேட்டது.

இதையடுத்து, கடந்த 13ம் தேதி காலை அப்பகுதி பொதுமக்கள் சென்று பார்த்தபோது, ​​தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழியாக சென்ற ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

a terrorist plot,tracks were ,அம்பலம், குண்டுவெடிப்பு, ரயில் பாதை, விசாரணை

இதனிடையே, பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) சம்பவ இடத்துக்குச் சென்று டெட்டனேட்டர் உள்ளிட்ட சில பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து தீவிரவாத கோணத்தில் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.பெரும் விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் ரயில் தண்டவாளத்தை தகர்த்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சதியில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யும் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :