மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
By: Nagaraj Fri, 16 Dec 2022 9:48:30 PM
கொழும்பு: போலி குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை நிறுத்த வலியுறுத்தி மருத்துவ பீட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு நகர மண்டப பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வசந்த முதலிகேவின் விடுதலையை வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த வலியுறுத்தியும் மாணவர்கள் கோஷங்களை எழுப்பி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக மாணவர்கள் மீதான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடுவதை நிறுத்த வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
students |
protest |
chant |
insist |