Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் டெங்கு உயர்வு .. தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

கேரளாவில் டெங்கு உயர்வு .. தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

By: vaithegi Mon, 26 June 2023 1:14:08 PM

கேரளாவில் டெங்கு உயர்வு  ..  தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்

சென்னை: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், அந்த மாநிலத்தில் டெங்கு உற்பத்தி அதிகரித்துள்ளது. அந்த மாநிலம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையோர மாவட்டங்களில் சிறப்பு முகாம்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த மாவட்டங்களில் கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளில் 18 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் கூறியதாவது: கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

dengue,kerala ,டெங்கு ,கேரளா

அந்த மாநில டெங்கு பாதிப்பு குறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. எல்லை மாவட்டங்களான கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து, தகவல்களை அளிக்குமாறு சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

எனவே இதற்கான பணிகளில் 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேவையான இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், தனி நபர் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.


Tags :
|