Advertisement

இராமநாதபுரத்தில் உயர்ந்து வரும் டெங்கு

By: vaithegi Wed, 15 Nov 2023 09:37:03 AM

இராமநாதபுரத்தில் உயர்ந்து வரும் டெங்கு

இராமநாதபுரம் ; டெங்கு காய்ச்சல் காரணமாக மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 16 பேர் அனுமதி ... இராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி கொண்டு வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டெங்கு வார்டில் இதுவரை 16 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

dengue,ramanathapuram,treatment ,டெங்கு,இராமநாதபுரம் ,சிகிச்சை


மேலும் அதுமட்டுமின்றி பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் ஆங்காங்கே பொதுமக்கள், டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக இராமநாதபுரத்தில் பெய்து வரும் தொடர் கன மழையின் காரணமாக ஆங்காங்கே மழை நீர் கழிவுநீருடன் தேங்கி நிற்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி இது போன்ற தொற்றுகள் பரவி கொண்டு வருகிறது.

Tags :
|