- வீடு›
- செய்திகள்›
- பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
By: vaithegi Sun, 09 July 2023 09:36:15 AM
சென்னை: மாணவர்களின் உடல்நலம் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும் .... ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் உடல்நலம் பற்றி ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரியைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும் இந்த ஆய்வின் போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.