கர்நாடக சட்டப்பேரவை துணை சபாநாயகர் காலமானார்
By: Nagaraj Sun, 23 Oct 2022 2:41:19 PM
பெங்களூர் : பாஜக எம்எல்ஏவும், கர்நாடக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ஆனந்த் மாமணி (56) உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
ஆனந்த் மாமணி சௌதாதி சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆனந்த் மாமணி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இருப்பினும் அங்கு அவர் காலமானார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆனந்த் மாமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும்
முதல்வர் பசவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் கட்சியின்
எம்எல்ஏவும், மாநிலங்களவை துணை சபாநாயகருமான ஆனந்த் சந்திரசேகர் மாமணியின்
மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்,
அவரது குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன்
வழங்கட்டும். ஆனந்த் மாமணியின். ஓம் சாந்தி.” என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மாமணியின் தந்தை
சந்திரசேகர் மாமணியும் 1990-களில் துணை சபாநாயகராகப் பணியாற்றியவர் என்பது
குறிப்பிடத்தக்கது.