தடம் புரண்ட ரயில்... மும்பையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு
By: Nagaraj Wed, 27 July 2022 08:17:34 AM
மும்பை: புறநகர் ரயில் சேவை பாதிப்பு... மும்பையில் ரயில் தடம் புரண்டதால் புறநகர் ரயில் சேவை இரண்டரை மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மஹாராஷ்டிராவின் மும்பையிலிருக்கும் சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையத்தில் ஒரு ரயில் தடம் புரண்டது. இதனால் புறநகர் ரயில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதை நம்பி பயணம் செய்யும் பயணிகள் அவதியடைந்தனர்.
இதனால், ரயில்களை இயக்க முடியாமல் போனது. ரயில்வே பொறியாளர்கள், மதியம் 12:15 மணிக்கு, தடம் புரண்ட ரயிலை சீரமைத்தனர். இதனால், புறநகர் ரயில் தடங்களில் இரண்டரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
மும்பை மாநகர போக்குவரத்தில் உயிர் நாடியாக திகழ்வது புறநகர் ரயில்கள் தான். தினமும் 'ஹார்பர் லைனில்' 10 லட்சம் பேரும், 'மெயின் லைனில்' 30 லட்சம் பேரும் பயணம் செய்கின்றனர்.