Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நவீன போர் விமானம் குறித்து விளக்கம்

எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நவீன போர் விமானம் குறித்து விளக்கம்

By: Nagaraj Thu, 20 Aug 2020 11:37:43 AM

எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள நவீன போர் விமானம் குறித்து விளக்கம்

இந்திய-சீன எல்லை நவீன போர் விமானம்... சீனாவின் மிகவும் நவீன போர் விமானமான ஜே-20 ஐ இந்திய-சீன எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளதை, இரு நாட்டு எல்லைப் பிரச்சனையுடன் தொடர்புள்ளதாக கருத வேண்டாம் என சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இந்திய சீன எல்லையில் இரண்டு ஜே-20 போர் விமானங்கள் இருப்பதற்கான சாட்டிலைட் படங்களை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டது. எல்லையில் இருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீனாவின் ஹோட்டன் விமான நிலையத்தில் இந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது.

description,indo-chinese border,warplane,movement ,விளக்கம், இந்திய-சீன எல்லை, போர் விமானம், இயக்கம்

சீனாவின் நான்காம் தலைமுறை போர் விமானமான ஜே-20, நீண்ட தூரம் பறக்கும் திறன் வாய்ந்தவையாகும்.

நீண்ட தூரம் பறந்து பயிற்சி செய்வதுடன் வெவ்வேறு சூழ்நிலைகளில் அதன் இயக்கத்தை சோதித்துப் பார்க்கவும் இந்த போர் விமானங்கள் வந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

Tags :