Advertisement

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தந்தங்கள் அழிப்பு

By: Nagaraj Tue, 11 Aug 2020 6:47:28 PM

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தந்தங்கள் அழிப்பு

சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தந்தங்கள் இயந்திரத்தை வைத்து உடைத்து நொறுக்கப்பட்டன.

சிங்கப்பூரில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 97 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்கள் சுக்கு நூறாக நொறுக்கப்பட்டன.

நாளை உலக யானைகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட 9 டன் எடையிலான யானை தந்தங்கள், பாறைகளை நொறுக்கும் இயந்திரத்தால் பொடிப்பொடியாக நொறுக்கப்பட்டன.

elephant,ivory,government of singapore,powdered ,யானை, தந்தங்கள், சிங்கப்பூர் அரசு, பொடிப்பொடியாக

இந்த தந்தங்களுக்காக 300க்கும் மேற்பட்ட யானைகள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள், நொறுக்கப்பட்ட தந்தங்களை எரித்து சாம்பலாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம், சட்ட விரோதமாக நடைபெறும் தந்தங்களின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags :
|