Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மழைபெய்யும் பகுதிகள் குறித்த விவரம்

தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மழைபெய்யும் பகுதிகள் குறித்த விவரம்

By: vaithegi Sun, 11 Dec 2022 2:13:44 PM

தமிழகத்தில் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் மழைபெய்யும் பகுதிகள் குறித்த விவரம்

சென்னை: மழைபெய்யும் இடங்கள் குறித்த விவரம் ... சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது.

chennai meteorological centre,rain , சென்னை வானிலை ஆய்வு மையம்,மழை

இதனை அடுத்து 12.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனை தொடர்ந்து 13.12.2022 மற்றும் 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும் 15.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :