பழனி முருகன் கோவிலில் மாத கார்த்திகைக்காக குவிந்த பக்தர்கள்
By: Nagaraj Wed, 09 Sept 2020 3:07:24 PM
பக்தர்கள் குவிந்தனர்... பழனி முருகன் கோவிலில் மாத கார்த்திகை பூஜைக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த 1-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. இதில் அரசு பல விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அனைத்து மாவட்டங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது.
இதனால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. மேலும் பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும். இதில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.