Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வார விடுமுறை நாள்... திருப்பதி கோவிலில் குவிந்த பக்தர்கள் ...காணிக்கை கோடி

வார விடுமுறை நாள்... திருப்பதி கோவிலில் குவிந்த பக்தர்கள் ...காணிக்கை கோடி

By: vaithegi Sun, 03 July 2022 7:25:35 PM

வார விடுமுறை நாள்... திருப்பதி  கோவிலில் குவிந்த  பக்தர்கள் ...காணிக்கை கோடி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு பட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வார விடுமுறை நாளான இன்று ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் மிகவும் அலைமோதுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

tribute,tribute ,காணிக்கை ,திருப்பதி

இயல்பாக இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும் ,சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்த நிலையில் ,உண்டியல் காணிக்கையாக மட்டும் ரூ.4 கோடியே 34 லட்சம் கிடைக்கப்பெற்றதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :