Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை

டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை

By: vaithegi Sat, 20 Aug 2022 6:24:04 PM

டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முதல்-அமைச்சர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதை பொருட்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் பல முடுக்கிவிட்டுள்ளார்.

இதனையடுத்து அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் போதை பொருள் ஒழிப்பில் மிக தீவிரம் காட்டி கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தினார்.

counseling,narcotics,shailendrababu ,ஆலோசனை ,போதை பொருட்கள்,சைலேந்திரபாபு

இதை தொடர்ந்து டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக் கண்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனர் அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் நேரில் பங்கேற்றனர்.

மேலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்கள், டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மிக தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதன் மூலம் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும் என கூட்டத்தில் சைலேந்திரபாபு நம்பிக்கை தெரிவித்தார்.

Tags :