Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து போட்டுக்கொண்டாரா வடகொரிய அதிபர்?

சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து போட்டுக்கொண்டாரா வடகொரிய அதிபர்?

By: Nagaraj Wed, 02 Dec 2020 9:17:06 PM

சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து போட்டுக்கொண்டாரா வடகொரிய அதிபர்?

கொரோனா பரவலால் சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், அவரது குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அரசின் உயர் மட்ட அளவிலான நிர்வாகிகள் குழுவும் சீனா அளித்துள்ள கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. குறித்த ரகசிய தகவலை, ஜப்பான் நாட்டின் உளவு அமைப்பும் உறுதி செய்துள்ளது.

கடந்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கிம் ஜாங் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஜப்பான் உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

north korea,vaccine,china,kim jong un,corona ,வடகொரியா, தடுப்பூசி, சீனா, கிம்ஜாங்உன், கொரோனா

சர்வதேச அளவில் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ள வட கொரியாவுக்கு இருக்கும் ஒரே ஆதரவு நாடு சீனா மட்டுமே.
சீனாவுடன் மட்டுமே வட கொரியா வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா தடுப்பூசி தொடர்பில் ரகசிய ஆவணங்களை கைப்பற்ற வட கொரியா முன்னெடுத்த இணைய வழியான தாக்குதல்களை தென் கொரியா முறியடித்ததாகவும்,
பிரித்தானியா நிறுவனம் ஒன்றில் முயன்று தோல்வியை சந்தித்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கொரோனா பரவல் தொடங்கிய காலகட்டத்தில் சீனா உடனான எல்லையை முதன் முதலில் மூடியவர் கிம் ஜாங் உன் மட்டுமே. மேலும், கடல் நீரினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக பயந்து, சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 110,000 டன் அளவிலான அரிசி, தற்போதும் துறைமுகத்தில் காத்துக் கிடப்பதாக கூறப்படுகிறது.

Tags :
|