Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி ... மின்தடை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி ... மின்தடை

By: vaithegi Wed, 10 Aug 2022 12:01:48 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணி ...  மின்தடை

தமிழகத்தில் மின் பயனர்களுக்கு தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மின்வாரியம் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இப்பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல் ஆகிய பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

அதை தொடர்ந்து பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி மின் சார்ந்த பணிகளை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

power outage,dindigul ,மின்தடை ,திண்டுக்கல்

அதன்படி நாளை (11.08.2022) திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.அதனால் வேடசந்தூா், நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி நாககோனனூா், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபீத்தாம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டியகவுண்டனூா், மல்வாா்பட்டி, சிக்கிராம்பட்டி, சோனாபுதூா், மாத்தினிபட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிபட்டி, விராலிபட்டி ஆகிய பகுதிகளும்

மேலும் புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான் கோட்டை, ஒட்ட நாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராம கவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :