Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி -உப்பள்ளி இடையே நேரடி விமான சேவை அடுத்த மாதம் தொடக்கம்

டெல்லி -உப்பள்ளி இடையே நேரடி விமான சேவை அடுத்த மாதம் தொடக்கம்

By: vaithegi Thu, 13 Oct 2022 07:26:57 AM

டெல்லி -உப்பள்ளி இடையே நேரடி விமான சேவை அடுத்த மாதம் தொடக்கம்

உப்பள்ளி: நேரடி விமான சேவை அடுத்த மாதம் தொடக்கம் ... மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உப்பள்ளி-டெல்லி இடையே தினசரி நேரடி விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

எனவே அதன்படி டெல்லி-உப்பள்ளி இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை அடுத்த மாதம்(நவம்பர்) 14-ந்தேதி முதல் தொடங்குகிறது.இதனை அடுத்து இதுதொடர்பாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

airline service,delhi,uppalli ,விமான சேவை,டெல்லி ,உப்பள்ளி

இந்த விமானம், டெல்லி விமான நிலையத்தில் இருந்து நவம்பர் மாதம் 14-ந்தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு உப்பள்ளி விமான நிலையம் வந்தடைகிறது. இதேபோன்று உப்பள்ளியில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3.45 மணிக்கு டெல்லி சென்றடைகிறது.

இதையடுத்து உப்பள்ளி-டெல்லி விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. எனவே, உப்பள்ளி-தார்வார் உள்ளிட்ட வடகர்நாடகத்தை சேர்ந்த பயணிகள் இந்த விமான சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்தார்.

Tags :
|