Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளிகளில் ‘தமிழ்’ மொழி பாடம் கட்டாயம் ... தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

பள்ளிகளில் ‘தமிழ்’ மொழி பாடம் கட்டாயம் ... தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

By: vaithegi Tue, 23 May 2023 10:53:46 AM

பள்ளிகளில்  ‘தமிழ்’ மொழி பாடம் கட்டாயம்   ...  தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

சென்னை: கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் 10ம் வகுப்பு வரை இனி ‘தமிழ் பாடம் கட்டாயம்’ என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய மொழி பாடமாக இருக்க வேண்டும்: எனவே 2024-25க்குள் அனைத்து தனியார் பள்ளிளும் 10ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

private schools,tamil language , தனியார் பள்ளிகள்,தமிழ் மொழி

மேலும் அனைத்து பள்ளிகளிலும் தகுதியான ஆசிரியர்களால் தமிழ் கற்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறம்பட கற்பிக்க தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இதையடுத்து 9 -12ம் வகுப்புகளில் கட்டாயமாக கூடுதல் மொழியாக தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். எனவே, பொதுத் தேர்வில் தமிழை ஒரு தேர்வாக மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.

Tags :