திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கல்
By: Nagaraj Fri, 14 July 2023 7:07:32 PM
திருச்சி: திருச்சி கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்பட்டது.
திருச்சி கலையரங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் கைம்பெண்களுக்கான SPARSH NID திட்டத்தின்கீழ் OUTREACH நிகழ்ச்சி நடந்தது.
ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் தக்ஷன் பாரத் தலைமையகத்தின் லெப்டினட் ஜெனரல் கரண்பீர் சிங் பிரார் தலைமையில் பாதுகாப்பு கணக்குத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் சென்னை ஜெயசீலன் IDAS முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, ஓய்வூதிய நிலுவை தொகைக்கான காசோலையை பயனாளிக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில், பாதுகாப்பு கணக்குத்துறை கட்டுப்பாட்டு அலுவலர் சங்கீதா IDAS அவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.