Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு மற்றும் சிலைகள் கண்டுபிடிப்பு

800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு மற்றும் சிலைகள் கண்டுபிடிப்பு

By: Nagaraj Thu, 11 Aug 2022 5:57:32 PM

800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்கால கல்வெட்டு மற்றும் சிலைகள் கண்டுபிடிப்பு

கள்ளக்குறிச்சி: சோழர்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு... கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தில் ஏரிக்கரை அருகே பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட 7 அடிகொண்ட சிவலிங்கம் ஒன்று உள்ளது.

அதனை அவர்கள் இன்று வரை பழமலைநாதர் என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்காரஉதியன் தலைமையில், தொல்லியல்ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ருட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி ஆகியோர் கடந்த 9ம் தேதியன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். அதில், 5 அடி நீளம் 3 1/2 அடி அகலத்தில் உள்ள கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முழுமையாகப் படித்து அறியமுடியாத 44 வரிகளைக் கொண்டது. எழுத்துகள் சிதைந்து உள்ளன. மேலும், இரண்டாம் குலோத்துங்கசோழனின் பூமேவி வளர என்னும் மெய்க் கீர்த்தி முழுமையாக இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது.

study,finds,chola period,inscription,statues ,ஆய்வு, கண்டெடுப்பு, சோழர்காலம், கல்வெட்டு, சிலைகள்

மேலும் இவ்வூரை பிரமதேயமாகவும், சதுர்வேதி மங்களமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இவ்வூரின் பெயரை அறிய முடியாத வண்ணம் சிதைந்துள்ளது. இங்குள்ள இறைவன் பெயரை அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார்.

கி.பி.1133 முதல் 1150 வரை அரசாண்ட இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த திருநீரேற்றான் ராஜேந்திரசோழ மலையகுலராயன் என்ற சிற்றரசன் காலத்தில் பல்வேறு அளவுகோலால் அளவீடு செய்யப்பட்ட 4004 குழிகள் கொண்ட நிலத்தை அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு தினசரி பூசைக்காகத் தானம் அளிக்கபட்ட செய்தி காணப்படுகிறது.

மேற்கண்ட நிலங்களுக்கு எல்லைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மிகப்பெரிய சிவாலயம் ஒன்று இங்கிருந்ததற்கான ஆதாரமாக இப்பகுதியைச் சுற்றிக் காணப்படும் நேர்த்தியானப் பழமைவாய்ந்த, பல்வேறு அளவுகளில் உள்ள சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆய்வின்போது வடதொரசலூர் ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டியன், புலவர் நாராயணசாமி, ராஜா, விசுவநாதன், வை. வடிவேல், பாலு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags :
|
|