Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி ... மின் விநியோகம் தடை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி ... மின் விநியோகம் தடை

By: vaithegi Thu, 18 Aug 2022 1:47:30 PM

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி ...   மின் விநியோகம் தடை

விருதுநகர் : தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்காக மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கொண்டு வருகிறது.

இதையடுத்தது இப்பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

power maintenance work,power supply interruption , மின் பராமரிப்பு பணி,மின் விநியோகம் தடை

மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர்.அந்த வகையில் ஆகஸ்ட் 20 தேதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அருப்புக்கோட்டை, பாலையம்பட்டி, பந்தல்குடி .

மேலும் வேலாயுதபுரம், பெரிய புளியம்பட்டி போன்ற பகுதிகளிலும் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags :