Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அருகருகே அமர்ந்து தேர்வு எழுத வைத்ததால் எழுந்த சர்ச்சை

அருகருகே அமர்ந்து தேர்வு எழுத வைத்ததால் எழுந்த சர்ச்சை

By: Nagaraj Fri, 21 Apr 2023 9:55:59 PM

அருகருகே அமர்ந்து தேர்வு எழுத வைத்ததால் எழுந்த சர்ச்சை

திண்டிவனம்: அருகருகே அமர்ந்து தேர்வு எழுதியதால் சர்ச்சை... விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற பி.எட் (B.Ed) தேர்வில் ஒரே பென்ஜில் 4 மாணவ மாணவிகள் அருகருகே அமர்ந்து தேர்வு எழுத வைக்கப்பட்டனர்.

ஆ.கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 7 கல்வியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதினர்.

examination,single bench,controversy,authors,explanation ,தேர்வு, ஒரே பெஞ்ச், சர்ச்சை, எழுதினர், விளக்கம்

ஒரு பென்ஜில் 2 பேர் அமர வேண்டிய நிலையில், 4 பேர் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்டதற்கான புகைப்படங்கள் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கல்லூரி முதல்வர்,வேலை நாள் என்பதுடன், அதிக மாணவர்கள் தேர்வு எழுத வந்ததாலும், தரையில் அமரவைத்து தேர்வு எழுத வைத்தால் பிரச்னையாகும் என்பதாலும் 4 பேர் அமர வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இருப்பினும் இது குறித்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று செய்வது தவறான முன்னுதாரணம் ஆகும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :