12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்
By: vaithegi Mon, 31 July 2023 10:59:26 AM
சென்னை: இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் ... கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட்ட நிலையில் 8.8 லட்சம் மாணவ மாணவியர்கள் தேர்வை எதிர்கொண்டனர். இதனைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியாகின.
மேலும் அத்துடன் தேர்வு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகின. மாணவர்கள் உயர்கல்வியில் சேர இணையத்திலிருந்து மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து உபயோகித்துக் கொள்ளலாம் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது.
எனவே 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் மதிப்பின் சான்றிதழை இன்று முதல் அவரவர் படித்த பள்ளிகளில் நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பிற தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.