தசரா பண்டிகையை ஒட்டி பெண்களுக்கு பதுகம்மா சேலைகள் வினியோகம்
By: Nagaraj Sun, 11 Oct 2020 6:31:41 PM
பதுகம்மா சேலைகளை பெண்களுக்கு வழங்கி வருகிறது தெலங்கானா அரசு.
தசரா பண்டிகை வரவுள்ளதை முன்னிட்டு தெலங்கானாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பதுகம்மா சேலைகளை வினியோகம் செய்து வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து மதத்தவர்களையும் சமமாக நடத்தும் வகையில் அனைத்து வகையான பண்டிகைகளுக்கும் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் பதுகம்மா சேலைகளை இலவசமாக வழங்கி வருகிறது.
அந்த வகையில் வரும் 17 ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் வரும் 17 ஆம் தேதி
முதல் தசரா பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் அங்குள்ள அனைத்து
பெண்களுக்கும் பதுகம்மா சேலைகளை நேற்று முதல் வினியோகம் செய்து வருகிறது.
கிட்டத்தட்ட
287 வடிவமைப்புகளில் நெய்யப்பட்ட இந்த சேலைகள் அங்குள்ள 33 மாவட்டங்களின்
நியாயவிலைக் கடைகளில் வினியோகம் செய்யப்படுகின்றன. 98 லட்சம் புடவைகளை
தயாரிக்க சுமார் 317 கோடி ரூபாயை அம்மாநில அரசு ஒதுக்கியுள்ளது.
புடவைகளை
பெற நாளை கடைசிநாள் என்பதால் புடவைகளை பெற தவறிய பெண்கள் அக்டோபர் 12
முதல் 15 வரை நியாயமான விலைக் கடைகளுக்கு வந்து பெற்றுச் செல்லலாம் என்று
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.