Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 3 நாட்கள் டோக்கன்...செப்டம்பர் 3-ந் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வினியோகம்!

இன்று முதல் 3 நாட்கள் டோக்கன்...செப்டம்பர் 3-ந் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வினியோகம்!

By: Monisha Sat, 29 Aug 2020 09:56:31 AM

இன்று முதல் 3 நாட்கள் டோக்கன்...செப்டம்பர் 3-ந் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வினியோகம்!

செப்டம்பர் மாதத்துக்கான ரேசன் பொருட்களை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அமுதம் ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் செப்டம்பருக்கான பொருட்களை ரேசன் அட்டைதாரர் பெற ஏதுவாக, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் நாளொன்றுக்கு 200 ரேசன் அட்டைகளுக்கு மிகாமல் வழங்க வேண்டும்.

september,ration items,token,ration card,social break ,செப்டம்பர்,ரேசன் பொருட்கள்,டோக்கன்,ரேசன் அட்டை,சமூக இடைவெளி

இதற்காக, நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு பொருட்கள் வாங்கும் டோக்கன்களை 29 (இன்று), 30, 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் வீடு, வீடாகச் சென்று ரேசன் கடை பணியாளர் மூலம் வழங்க வேண்டும்.

பொருட்களை செப்டம்பர் 3-ந் தேதியில் வினியோகிக்க வேண்டும். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள், நேரத்தில் மட்டும் பொருள் வழங்க வேண்டும். மற்ற நேரத்தில் பொருள் வழங்கப்படாது என்று ரேசன் அட்டைதாரர்களிடம் டோக்கன் வழங்கும் போது தெரிவிக்க வேண்டும். ஒரு அட்டைக்கு ஒருவர் மட்டுமே பொருள் வாங்க வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|