Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

By: Monisha Wed, 17 June 2020 10:54:04 AM

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்ட நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நோய் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே இந்த 4 மாவட்டங்களுக்கும் வருகிற 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.

இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிபதிகள் ஜூன் 30ம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாகக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

curfew,coronavirus,judges,chennai,tiruvallur ,ஊரடங்கு,கொரோனா வைரஸ்,நீதிபதிகள்,சென்னை,திருவள்ளூர்

மேலும், 4 மாவட்டங்களில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே நீதிமன்றத்திற்கு வந்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாவட்ட நீதிமன்றங்களில் ஊழியர்களை குறைப்பது குறித்து முதன்மை நீதிபதிகள் முடிவு செய்யலாம்.

4 மாவட்டங்களை தவிர்த்து தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி, திருப்பூர் ஆகிய மாவட்ட நீதிமன்றங்கள் தற்போதைய விதிமுறைகளின்படி செயல்படலாம்.

Tags :
|
|