Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் இந்த வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் இந்த வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Wed, 27 Sept 2023 4:35:53 PM

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் இந்த வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை: தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தில் சொந்த நிலம், குத்தகை நிலத்தில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பங்கேற்கலாம்.

இத்திட்டம் மூலம் பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறி விதைகளை கொண்டு சேர்ப்பது, முறையான மண்வளம் மேம்பாடு அங்கக முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணிகளின் அடிப்படையில் விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

awards,farmers,vegetables ,விருதுகள்,  விவசாயிகள்,காய்கறிகள்

இத்திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறி முறைகள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசாக ரூ. 15000 மற்றும் 2-ம் பரிசாக ரூ.10000 வரைவோலை வழங்கப்படும். இத்திட்டத்தின் பயன் பெற தோட்டக்கலைத் துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகங்களில் செப்.30 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையடுத்து இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களான உமா கள்ளக்குறிச்சி- 8098327732, முருகன் சின்னசேலம்- 9787863135, சத்தியராஜ் சங்கராபுரம்- 9524737498, முருகன் ரிஷிவந்தியம்- 9688940083, சக்திவேல் திருக்கோவிலூர்- 7811967632, முரளி திருநா வலூர்- 9976196911, சொர்ணம் தியாகதுருகம்- 8903555527, விஜயலட்சுமி உளுந்தூர்பேட்டை- 9894142635, வாமலை வெள்ளி மலை- 9787237797 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். அல்லது அல்லது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை நேரில் அணுகி பயன்பெறலாம்.

Tags :
|