Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை

By: Monisha Tue, 24 Nov 2020 07:31:06 AM

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 12 ஆயிரத்து 245 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 904 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 47 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,death,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 24
செங்கல்பட்டு - 860
சென்னை - 4,354
கோவை - 698
கடலூர் - 134
தர்மபுரி - 135
திண்டுக்கல் - 68
ஈரோடு - 303
கள்ளக்குறிச்சி - 81
காஞ்சிபுரம் - 404
கன்னியாகுமரி - 133
கரூர் - 246
கிருஷ்ணகிரி - 237
மதுரை - 245
நாகை - 283
நாமக்கல் - 249
நீலகிரி - 144
பெரம்பலூர் - 1
புதுக்கோட்டை - 114
ராமநாதபுரம் - 45
ராணிப்பேட்டை - 122
சேலம் - 610
சிவகங்கை - 68
தென்காசி - 67
தஞ்சாவூர் - 160
தேனி - 26
திருப்பத்தூர் - 53
திருவள்ளூர் - 595
திருவண்ணாமலை - 166
திருவாரூர் - 188
தூத்துக்குடி - 115
திருநெல்வேலி - 121
திருப்பூர் - 623
திருச்சி - 128
வேலூர் - 209
விழுப்புரம் - 145
விருதுநகர் - 73
விமானநிலைய கண்காணிப்பு -18

Tags :
|