Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் மாவட்ட வாரியாக 45 ஆயிரத்து 135 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக 45 ஆயிரத்து 135 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

By: Monisha Thu, 08 Oct 2020 10:25:51 AM

தமிழகத்தில் மாவட்ட வாரியாக 45 ஆயிரத்து 135 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 524 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 736 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 984 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,treatment,infection,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பாதிப்பு,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 208
செங்கல்பட்டு - 2,657
சென்னை - 13,110
கோவை - 4,941
கடலூர் - 1,232
தர்மபுரி - 737
திண்டுக்கல் - 381
ஈரோடு - 1,057
கள்ளக்குறிச்சி - 349
காஞ்சிபுரம் - 895
கன்னியாகுமரி - 795
கரூர் - 405
கிருஷ்ணகிரி - 759
மதுரை - 699
நாகை - 510
நாமக்கல் - 1,075
நீலகிரி - 813
பெரம்பலூர் - 91
புதுக்கோட்டை - 625
ராமநாதபுரம் - 169
ராணிப்பேட்டை - 366
சேலம் - 2,409
சிவகங்கை - 218
தென்காசி - 271
தஞ்சாவூர் - 1,268
தேனி - 469
திருப்பத்தூர் - 441
திருவள்ளூர் - 1,732
திருவண்ணாமலை - 782
திருவாரூர் - 804
தூத்துக்குடி - 505
திருநெல்வேலி - 774
திருப்பூர் - 1,146
திருச்சி - 715
வேலூர் - 867
விழுப்புரம் - 598
விருதுநகர் - 225
விமானநிலைய கண்காணிப்பு - 35
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :