Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Mon, 05 Oct 2020 09:19:16 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 46 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 489 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 120 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 558 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 784 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 241
செங்கல்பட்டு - 2,599
சென்னை - 12,283
கோவை - 4,888
கடலூர் - 1,435
தர்மபுரி - 764
திண்டுக்கல் - 361
ஈரோடு - 1,113
கள்ளக்குறிச்சி - 349
காஞ்சிபுரம் - 893
கன்னியாகுமரி - 803
கரூர் - 430
கிருஷ்ணகிரி - 788
மதுரை - 708
நாகை - 432
நாமக்கல் - 1,063
நீலகிரி - 809
பெரம்பலூர் - 116
புதுக்கோட்டை - 691
ராமநாதபுரம் - 160
ராணிப்பேட்டை - 457
சேலம் - 2,692
சிவகங்கை - 237
தென்காசி - 349
தஞ்சாவூர் - 1,591
தேனி - 501
திருப்பத்தூர் - 483
திருவள்ளூர் - 1,727
திருவண்ணாமலை - 831
திருவாரூர் - 981
தூத்துக்குடி - 544
திருநெல்வேலி - 819
திருப்பூர் - 1,401
திருச்சி - 750
வேலூர் - 841
விழுப்புரம் - 738
விருதுநகர் - 225
விமானநிலைய கண்காணிப்பு - 25
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :