Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Tue, 06 Oct 2020 09:45:31 AM

தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று புதிதாக 5 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 25 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 45 ஆயிரத்து 881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 572 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 69 ஆயிரத்து 664 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 846 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,infection,treatment,deaths ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 223
செங்கல்பட்டு - 2,725
சென்னை - 12,560
கோவை - 4,890
கடலூர் - 1,377
தர்மபுரி - 762
திண்டுக்கல் - 371
ஈரோடு - 1,087
கள்ளக்குறிச்சி - 360
காஞ்சிபுரம் - 876
கன்னியாகுமரி - 741
கரூர் - 415
கிருஷ்ணகிரி - 745
மதுரை - 660
நாகை - 473
நாமக்கல் - 1,061
நீலகிரி - 852
பெரம்பலூர் - 103
புதுக்கோட்டை - 670
ராமநாதபுரம் - 163
ராணிப்பேட்டை - 402
சேலம் - 2,655
சிவகங்கை - 233
தென்காசி - 324
தஞ்சாவூர் - 1,441
தேனி - 487
திருப்பத்தூர் - 460
திருவள்ளூர் - 1,717
திருவண்ணாமலை - 845
திருவாரூர் - 934
தூத்துக்குடி - 543
திருநெல்வேலி - 817
திருப்பூர் - 1,383
திருச்சி - 724
வேலூர் - 852
விழுப்புரம் - 685
விருதுநகர் - 235
விமானநிலைய கண்காணிப்பு - 28
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :