Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

By: Monisha Tue, 13 Oct 2020 09:40:50 AM

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு நேற்று 4 ஆயிரத்து 879 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 61 ஆயிரத்து 264 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 203 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது.

tamil nadu,corona virus,treatment,death,infection ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பலி,பாதிப்பு

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 246
செங்கல்பட்டு - 2,147
சென்னை - 13,756
கோவை - 4,839
கடலூர் - 1,093
தர்மபுரி - 765
திண்டுக்கல் - 374
ஈரோடு - 1,093
கள்ளக்குறிச்சி - 323
காஞ்சிபுரம் - 829
கன்னியாகுமரி - 790
கரூர் - 410
கிருஷ்ணகிரி - 791
மதுரை - 800
நாகை - 528
நாமக்கல் - 1,078
நீலகிரி - 797
பெரம்பலூர் - 90
புதுக்கோட்டை - 529
ராமநாதபுரம் - 184
ராணிப்பேட்டை - 336
சேலம் - 2,289
சிவகங்கை - 188
தென்காசி - 181
தஞ்சாவூர் - 773
தேனி - 444
திருப்பத்தூர் - 447
திருவள்ளூர் - 1,587
திருவண்ணாமலை - 729
திருவாரூர் - 575
தூத்துக்குடி - 539
திருநெல்வேலி - 679
திருப்பூர் - 1,301
திருச்சி - 649
வேலூர் - 774
விழுப்புரம் - 518
விருதுநகர் - 242
விமானநிலைய கண்காணிப்பு - 32
ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

Tags :
|