தமிழகத்தில் கொரோனாவுக்கு 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்
By: Monisha Wed, 14 Oct 2020 10:12:17 AM
தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 4 ஆயிரத்து 666 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 65 ஆயிரத்து 930 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 43 ஆயிரத்து 239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 117 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 12 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 57 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 255
செங்கல்பட்டு - 2,066
சென்னை - 13,704
கோவை - 4,764
கடலூர் - 1,082
தர்மபுரி - 807
திண்டுக்கல் - 390
ஈரோடு - 1,032
கள்ளக்குறிச்சி - 318
காஞ்சிபுரம் - 818
கன்னியாகுமரி - 768
கரூர் - 409
கிருஷ்ணகிரி - 796
மதுரை - 793
நாகை - 526
நாமக்கல் - 1,062
நீலகிரி - 727
பெரம்பலூர் - 82
புதுக்கோட்டை - 507
ராமநாதபுரம் - 186
ராணிப்பேட்டை - 370
சேலம் - 2,269
சிவகங்கை - 180
தென்காசி - 190
தஞ்சாவூர் - 727
தேனி - 440
திருப்பத்தூர் - 423
திருவள்ளூர் - 1,512
திருவண்ணாமலை - 696
திருவாரூர் - 638
தூத்துக்குடி - 535
திருநெல்வேலி - 677
திருப்பூர் - 1,329
திருச்சி - 634
வேலூர் - 728
விழுப்புரம் - 520
விருதுநகர் - 262
விமானநிலைய கண்காணிப்பு - 17