கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 39,856 பேர் சிகிச்சை - மாவட்ட வாரியாக முழு தகவல்
By: Monisha Thu, 02 July 2020 09:51:41 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது சில நாட்களாக மாநிலத்தில் ஒவ்வொரு நாளும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 39 ஆயிரத்து 856 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளி இடங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் வழியாக வந்தவர்களில் 624 பேர் சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை 52 ஆயிரத்து 926 அதிகரித்துள்ளது.
ஆனாலும், நேற்று ஒரே நாளில் 63 பேர் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:-
அரியலூர் - 38
செங்கல்பட்டு - 2,791
சென்னை - 22,777
கோவை - 337
கடலூர் - 350
தர்மபுரி - 57
திண்டுக்கல் - 215
ஈரோடு - 92
கள்ளக்குறிச்சி - 497
காஞ்சிபுரம் - 1,200
கன்னியாகுமரி - 242
கரூர் - 30
கிருஷ்ணகிரி - 101
மதுரை - 1,941
நாகை - 166
நாமக்கல் - 11
நீலகிரி - 74
பெரம்பலூர் - 6
புதுக்கோட்டை - 132
ராமநாதபுரம் - 697
ராணிப்பேட்டை - 297
சேலம் - 655
சிவகங்கை - 180
தென்காசி - 186
தஞ்சாவூர் - 227
தேனி - 562
திருப்பத்தூர் - 133
திருவள்ளூர் - 1,400
திருவண்ணாமலை - 973
திருவாரூர் - 280
தூத்துக்குடி - 255
திருநெல்வேலி - 243
திருப்பூர் - 71
திருச்சி - 328
வேலூர் - 1,035
விழுப்புரம் - 353
விருதுநகர் - 300