Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்

By: Monisha Sat, 27 June 2020 09:14:03 AM

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்

தமிழகத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 3 ஆயிரத்து 523 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 22 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 41 பேர். வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக கப்பல் மூலம் வந்தவர்கள் 4 பேர் ஆவர். மேலும், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 55 பேர் ஆகும்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 32 ஆயிரத்து 305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 957 பேர் உயிரிழந்துள்ளனர்.

tamil nadu,coronavirus,infection,mortality,treatment ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,உயிரிழப்பு,சிகிச்சை

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 232
சென்னை - 1,956
கோவை - 41
கடலூர் - 17
தர்மபுரி - 5
திண்டுக்கல் - 2
ஈரோடு - 6
கள்ளக்குறிச்சி - 48
காஞ்சிபுரம் - 90
கன்னியாகுமரி - 25
கரூர் - 2
கிருஷ்ணகிரி - 14
மதுரை - 190
நாகை - 17
நாமக்கல் - 6
நீலகிரி - 7
புதுக்கோட்டை - 10
ராமநாதபுரம் - 68
ராணிப்பேட்டை - 53
சேலம் - 86
சிவகங்கை - 7
தென்காசி - 12
தஞ்சாவூர் - 25
தேனி - 40
திருப்பத்தூர் - 4
திருவள்ளூர் - 177
திருவண்ணாமலை - 66
திருவாரூர் - 16
தூத்துக்குடி - 36
திருநெல்வேலி - 18
திருப்பூர் - 14
திருச்சி - 32
வேலூர் - 148
விழுப்புரம் - 16
விருதுநகர் - 33

Tags :