Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்

By: Monisha Sun, 28 June 2020 10:31:41 AM

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்கள் குறித்த தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மாநிலத்தில் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் தளர்வுகள் மற்றும் அதிகப்படியான பரிசோதனைகள் காரணமாக நேற்று மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 3 ஆயிரத்து 624 பேர். விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 8 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 9 பேர், ரெயில் மற்றும் சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 72 பேர் ஆவர்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது.

tamil nadu,coronavirus,influence,district,madras ,தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,பாதிப்பு,மாவட்டம்,சென்னை

உள்மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 4
செங்கல்பட்டு - 248
சென்னை - 1,939
கோவை - 33
கடலூர் - 9
தர்மபுரி - 2
திண்டுக்கல் - 26
ஈரோடு - 14
கள்ளக்குறிச்சி - 18
காஞ்சிபுரம் - 98
கன்னியாகுமரி - 32
கரூர் - 1
கிருஷ்ணகிரி - 26
மதுரை - 217
நாகை - 31
நாமக்கல் - 3
நீலகிரி - 10
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 18
ராமநாதபுரம் - 93
ராணிப்பேட்டை - 96
சேலம் - 34
சிவகங்கை - 28
தென்காசி - 9
தஞ்சாவூர் - 16
தேனி - 35
திருப்பத்தூர் - 16
திருவள்ளூர் - 146
திருவண்ணாமலை - 110
திருவாரூர் - 46
தூத்துக்குடி - 43
திருநெல்வேலி - 11
திருப்பூர் - 9
திருச்சி - 31
வேலூர் - 118
விழுப்புரம் - 51

Tags :