Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு

இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு

By: Nagaraj Wed, 26 July 2023 11:48:29 PM

இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு

கொழும்பு: இலங்கை அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள சிறுபான்மை தமிழர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தேசிய நல்லிணக்க திட்டம் குறித்து விவாதிக்க இன்று (புதன்கிழமை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதில் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளன.

all,assembly,opposition parties,party,sri lanka ,அனைத்து, இலங்கை, எதிர்க்கட்சிகள், கட்சி, கூட்டம்

அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பான முழுமையான தகவல்கள் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் சில கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன.

இன்னும் சில கட்சிகள் தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. இதேவேளை, இந்த சந்திப்பு உண்மையான முயற்சியாக இல்லாமல் அரசியல் வித்தை என நிரூபிக்கப்பட்டால் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Tags :
|
|