Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளி பண்டிகை .... தமிழக காவலர்களுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

தீபாவளி பண்டிகை .... தமிழக காவலர்களுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

By: vaithegi Wed, 19 Oct 2022 7:24:03 PM

தீபாவளி பண்டிகை   ....   தமிழக காவலர்களுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

சென்னை: தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை வாங்க கடை வீதிகளில் குவிந்து கொண்டு வருகின்றனர். இதையடுத்து எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

கடை விற்பனையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து கொண்டு வருகின்றனர். சென்னையில் தண்டையார்பேட்டை , டி. நகர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

dgp,diwali ,டிஜிபி ,தீபாவளி

அதே போன்று மதுரை,கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கடை தோறும் மக்கள் போட்டி போட்டு கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நேரத்தில் மக்களின் பாதுகாப்பு கருதி கூட்ட நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் தற்போது பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கடை வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு அரசு இந்த வாரம் முழுவதும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்துள்ளது. அதனால் கடைகள் முழுவதும் விற்பனைக்காக இரவு முழுவதும் திறந்திருக்கும். இந்த நேரத்தில் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் கடை உரிமையாளர்களை எந்த விதத்திலும் தொந்தரவு அளிக்க கூடாது என டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|