Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திமுக எதுவும் செய்யவில்லை... முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

திமுக எதுவும் செய்யவில்லை... முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

By: Nagaraj Sun, 09 July 2023 5:53:52 PM

திமுக எதுவும் செய்யவில்லை... முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

கோவை: திமுக எதுவும் செய்யவில்லை... காவிரி பிரச்சனையின் போது அ.தி.மு.க. நாடாளுமன்றத்தை 23 நாட்கள் முடக்கியதைப் போல தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கோவையில் பேட்டியளித்த அவர், பொது பிரச்சனை எதுவாக இருந்தாலும் அ.தி.மு.க. மக்கள் பக்கம் நிற்கும் என்றார்.

aiadmk,former minister,alternative party,joined,people ,அதிமுக, முன்னாள் அமைச்சர், மாற்று கட்சி, இணைந்தனர், மக்கள்

அ.தி.மு.க.வில் தன்னைப் போன்ற, எடப்பாடி பழனிசாமி போன்ற சாதாரண தொண்டர்கள் கூட மிகப்பெரிய பொறுப்பிற்கு வரமுடியும் என்று அவர் கூறினார். கட்சி உறுப்பினர்களை ஒரு குடும்பமாக அரவணைத்து செல்வது அ.தி.மு.க. தான் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து அவர் வரவேற்றார்.

Tags :
|
|