காவிரி பிரச்னையில் இரட்டை வேடம் போடும் திமுக: கண்டித்து அமமுக 5ம் தேதி ஆர்ப்பாட்டம்
By: Nagaraj Thu, 31 Aug 2023 6:48:04 PM
சென்னை: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 5-ம் தேதி டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் என்று அ.ம.மு.க. தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடக காங்கிரஸ் அரசு கூறி வருவதால் பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தேர்தல் கூட்டணிதான் முக்கியம் என்று சுயநலத்துடன் தி.மு.க. அரசு செயல்படுகிறது. காவிரி பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் மக்கள் விரோத தி.மு.க.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பெரியார் சிலை அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வரும் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.